காங்சேன்துறை கடற்படை வீரர்களுக்கு கொரோனா - யாழ் அரச அதிபர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்
கடற்படையைச் சேர்ந்த 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஐப்பசி 4ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து காலை 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
பின்னர் அதே தினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11.00 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மேலும் இதே கடற்படை முகாமை சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் புரட்டாதி 27ம் திகதி பதுளை மாவட்டத்தில் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார்.
காங்சேன்துறை கடற்படை வீரர்களுக்கு கொரோனா - யாழ் அரச அதிபர் விடுத்துள்ள அவசர அறிவித்தல்
Reviewed by Author
on
October 18, 2020
Rating:

No comments:
Post a Comment