கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 9 பேர் பலி
கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகின.
கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்டினால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 9 பேர் பலி
Reviewed by Author
on
November 22, 2020
Rating:
Reviewed by Author
on
November 22, 2020
Rating:


No comments:
Post a Comment