அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை ) இரவு 10.30 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றிருந்த 20 இலங்கையர்கள் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே -648 விமானத்தில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

 அதேபோன்று இன்று காலை 3.50 மணியளவில், ஜப்பான் நரிட்டோவிலிருந்து 16 இலங்கையர்கள், இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -455 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர் Reviewed by Author on November 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.