புதிய இரண்டு அமைச்சுகளுக்கான வர்த்தமானி வெளியீடு
புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி செயற்படவுள்ளது.
இதுவரையில், ஜனாதிபதி செயலகத்தின் கீழிருந்து இலங் கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், சிறி லங்கா ரெலிகொம் மற்றும் அதன் நிர்வாக நிறுவனங்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இதுவரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கீழிருந்த காவல்துறை திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சிவில் பாது காப்பு திணைக்களம் என்பன புதிய வர்த்தமானி அறி வித்தலின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச் சான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன
.
.
புதிய இரண்டு அமைச்சுகளுக்கான வர்த்தமானி வெளியீடு
Reviewed by Author
on
November 23, 2020
Rating:
Reviewed by Author
on
November 23, 2020
Rating:


No comments:
Post a Comment