அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஒரு தொகுதி கஞ்சாவுடன் மேலும் ஒருவர் கைது.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்; 4 கிலோ 345 கிராம் கேரளா கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை (12)மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி,மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்ளேவலவின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ றாயபக்ஸ,தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கேரள கஞ்சா பொதியினையினையும்,குறித்த நபரையும் கைது செய்துள்ளனர். 

 கடந்த புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வைத்து வாகனம் ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குஞ்சுக்குளம் சந்தியில் உள்ள பொலிஸ் மற்றும் இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து புதன் கிழமை(11) இரவு குறித்த வாகனம் சோதனைக்கு உற்படுத்தப்பட்டது. இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 486 கிராம் கேரளா கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டது.அவர்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கு அமைவாகவே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதோடு,சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் ஒரு தொகுதி கஞ்சாவுடன் மேலும் ஒருவர் கைது. Reviewed by Author on November 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.