அண்மைய செய்திகள்

recent
-

மஹர சிறைச்சாலை மோதல் 10 பேர் கவலைக்கிடம் -காயமடைந்த 26 பேருக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் நேற்றையதினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 இதன்படி காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுள் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த மோதல் சம்பவத்தில் 08 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹர சிறைச்சாலை மோதல் 10 பேர் கவலைக்கிடம் -காயமடைந்த 26 பேருக்கு கொரோனா Reviewed by Author on November 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.