ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி உயிரிழப்பு!
கடந்த மூன்றாம் திகதி இந்தச் சிறுமி ஊஞ்சலாடுவதற்காக மரத்திலிருந்த ஊஞ்சல் கயிற்றை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார். இதன்போது கயிறு தவறுதலாக சிறுமியின் கழுத்தில் சிக்கிய நிலையில் அவர் ஏறி நின்ற கதிரையும் சரிந்துள்ளது. இதனால் சிறுமி நிலை தடுமாறி விழுந்ததில் கயிறு கழுத்தை இறுக்கியுள்ளது.
இந்நிலையில் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த தாய், மகள் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி உயிரிழப்பு!
Reviewed by Author
on
November 13, 2020
Rating:

No comments:
Post a Comment