அண்மைய செய்திகள்

recent
-

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை மாறவில்லை :

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை மாறவில்லை : நா.பிரதீபராஜா, புவியியல் துறை விரிவுரையாளர். வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை( இன்னும் புயலாக மாறவில்லை. ஆனால் நாளை 24.11.2020 இது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது) யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 484 கி.மீ. தொலைவிலும் முல்லைத்தீவுக்கு கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 

 இது எதிர்வரும் 24.11.2020 அல்லது 25.11.2020 அன்று தமிழ்நாட்டின் கடலூர் அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தீவிர தாழமுக்கம் தமிழ்நாட்டிலேயே கரையைக் கடக்கும் என்பதனால் எமக்கு பாரிய பாதிப்புக்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இத்தீவிர தாழமுக்கம் வடமேற்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதனால் வடமாகாணத்தின் பல பகுதிகளும் குறிப்பாக முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரங்கள் இத்தாழமுக்கத்தின் உள் மற்றும் வெளிவலயங்களுக்குள் வருகின்றமையால் இப்பகுதிகளில் கன மழையுடன் பலத்த காற்றும் வீசக் கூடும். இன்றுமுதல் (23.11.2020) மழை தொடங்கினாலும் குறிப்பாக 24.11.2020 ,25.11.2020 மற்றும் 25.11.2020 அன்றும் செறிவான மழை கிடைப்பதுடன் காற்றின் வேகமும் மணிக்கு 60 கீ.மீ. இனை விட வேகமாக வீசும் என எதிர்பார்க்கலாம். மேலதிக விபரங்கள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.





வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை மாறவில்லை : Reviewed by Author on November 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.