அண்மைய செய்திகள்

recent
-

மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றைய தினம் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

 மஹரகம எருவ்வல தர்மபால பாடசாலை மைதானத்தில் குறித்த மாணவன் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற போது குறித்த வைத்தியரால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவனின் நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! Reviewed by Author on November 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.