கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்ட 18 வயது இளைஞன்!
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது, ஹல்கஹவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
தனிப்பட்ட முரண்பாடொன்றின் காரணமாக ஏற்பட்ட மோதலின் போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தினால் குத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் குறித்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்ட 18 வயது இளைஞன்!
Reviewed by Author
on
December 08, 2020
Rating:

No comments:
Post a Comment