அண்மைய செய்திகள்

recent
-

கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்ட 18 வயது இளைஞன்!

பொரளை - ஹல்கஹவத்த பகுதியில் இளைஞர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட கூரிய ஆயுதத்திலான தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் வீடொன்றின் முன்னால், நேற்று திங்கட்கிழமை இரவு 11.20 மணியளவில் வெட்டுக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில், இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது, ஹல்கஹவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். தனிப்பட்ட முரண்பாடொன்றின் காரணமாக ஏற்பட்ட மோதலின் போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தினால் குத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் குறித்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்ட 18 வயது இளைஞன்! Reviewed by Author on December 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.