மன்னாரில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாக மீனவர்களின் ஒரு தொகுதி படகுகள் சேதம்- 2 ஆயிரத்து 236 குடும்பங்கள் பாதிப்பு.
பாதீக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-இதே வேளை காற்றுடன் கூடிய மழை காரணமாக தலைமன்னார்,பேசாலை உற்பட மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு தொகுதி படகுகள் சேதமாகி உள்ளது.
50 இலுவைப்படகுகள்(டோலர்), 200 இற்கும் மேற்பட்ட கண்ணாடியிழைப்படகுகள், மற்றும் 200 ற்கும் மேற்பட்ட வள்ளம் போன்றவை சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.
இதனால் பல இலட்சம் ரூபாய் நஸ்டத்தை மீனவர்கள் எதிர் நோக்கி உள்ளனர்.
-மேலும் தலை மன்னார் பியர் கடற்கரையோரப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் சில காணாமல் போயுள்ளதுடன் , படகுகள் வாடிகள் , மீன்பிடி உபகரணங்கள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாக மீனவர்களின் ஒரு தொகுதி படகுகள் சேதம்- 2 ஆயிரத்து 236 குடும்பங்கள் பாதிப்பு.
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment