அண்மைய செய்திகள்

recent
-

நுணாவில் விபத்தில் பெண் பலி; இருவர் படுகாயம்!

தென்மராட்சி – நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது இன்று (09) சற்றுமுன் கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனத்தின் மீது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த கார் ஒன்று மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

 மூவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளார். டபிள்யூபி (WP) என்ற பதிவிலக்கமுடைய கார் என்பதால் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

நுணாவில் விபத்தில் பெண் பலி; இருவர் படுகாயம்! Reviewed by Author on December 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.