கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட் சைக்குத் தோற்றிய மாணவர்களின் புள்ளிகளின் அடிப் படையில் 2021 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் மாண வர் களை இணைத்துக்கொள்வதற்காக புதிய பாடசாலை களுக்கான அனுமதியை முதல் முறையாக ஒன்லையின் தொழில்நுட்பம் ஊடாக இன்று காலை மேற் கொள்ளப் பட்டது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் கீழ், 2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளுக்கு விண் ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் படி மாணவர்கள் விண்ணப்பித்துள்ள பாடசாலை பெயர் உட்பட விண்ணப்பம் தொடர்பான ஏனை விபரங் களைப் பாடசாலை அதிபரால் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று முதல் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் சகல அதிபர்களுக்கும் இந்த தரவை உள்ளிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட் சைக்கு 326,264 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர் இதில் 47,193 மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெ ற்று புதிய பாடசாலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற் றுள்ளனர்.
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Reviewed by Author
on
December 10, 2020
Rating:

No comments:
Post a Comment