அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் கொரோனாவினால் முதல் மரணம் பதிவானது!

மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் முதல் மரணம் இன்று (சனிக்கிழமை) மாலை பதிவாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இரத்தம் மாற்றும் சிகிச்சை மேற்கொண்டுவந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

 இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவரின் இறப்பு இன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் உயிரிழப்பு ஐந்தாக அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பில் கொரோனாவினால் முதல் மரணம் பதிவானது! Reviewed by Author on December 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.