மன்னாரில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மற்றும் ஏலக்காய் மூடைகள் மீட்பு-மூன்று சந்தேக நபர்கள் கைது
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி கட்டுக்காரன் குடியிருப்பு காட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சற்றுத் தொலைவில் கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை(14) காலை நிறுத்தி வைக்கப்பட்ட மகேந்திர ரக வாகனத்தில் குறித்த மஞசள் மூடைகள் மற்றும் ஏலக்காய் மூடை என்பன இராணுவம் மற்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 2433 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மற்றும் 50 கிலோ ஏலக்காய் போன்றவை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-தலைமன்னார் பொலிஸார் குறித்த நபர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-விசாரனைகளின் பின்னர் சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதோடு,மீட்கப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் , ஏலக்காய் மூடை ஆகியவை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மற்றும் ஏலக்காய் மூடைகள் மீட்பு-மூன்று சந்தேக நபர்கள் கைது
Reviewed by Author
on
December 14, 2020
Rating:

No comments:
Post a Comment