அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு - 0.625 வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!
1. மாதத்திற்கு ரூ .50,000 க்கு மேல் சம்பளம் அல்லது வருமானம் உள்ளவர்கள் ரூ .50,000 கடன் பெறலாம்.
2. மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 முதல் ரூ .50,000 வரை உள்ளவர்களுக்கு ரூ .25,000 கடன் வழங்கப்படவுள்ளது.
3. மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும் குறைவாக இருந்தால், கடன் தொகை ரூ .10,000 ஆகும்.
இந்த கடன்கள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கியின் மூலம் வழங்கப்படுகின்றன.
நிதி உதவி பெற விரும்பும் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.
"நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களின் சான்றளிக்கப்பட்ட கடிதத்தை பணிபுரியும் இடத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, குறித்த வங்கியினால் ஊழியர்களின் கணக்குகளில் உடனடியாக குறித்த கடன் தொகை வரவு வைக்கப்படும்.
குறித்த கடன் தொகையை 10 மாதக் காலப்பகுதியில் செலுத்தி நிறைவு செய்ய வேண்டும.
மாத வட்டி விகிதம் 0.625 சதவீதம் ஆகும். கடன் தொகை 2021 ஜனவரி முதல் அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.
அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு - 0.625 வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment