மன்னாரில் ஊடக சந்திப்பு நடத்திய நான்கு பேரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினர்
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நினைவேந்தல்களை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றத்தினூடாக மன்னார் பொலிஸார் தடை உத்தரவை பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி குறித்த குழுவினரினால் விசேட ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர்.
குறிப்பாக அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றுங்கள் என தெரிவித்த கருத்து தொடர்பாகவும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலத்தை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மன்னாரில் ஊடக சந்திப்பு நடத்திய நான்கு பேரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினர்
Reviewed by Author
on
December 01, 2020
Rating:

No comments:
Post a Comment