அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் வௌ்ளிக்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத சம்பத் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

 வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் மாகாண மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் புயலாக மாறி அடுத்த 24 மணிநேரத்தில் கிழக்கு மாகாணம் ஊடாக முல்லைத்தீவைக் கடந்து செல்லும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு Reviewed by Author on December 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.