யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய இருவர் கைது
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ.ஜெயசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவதினமான இன்று அதிகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை வீதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தப்போது, மறைத்து வைக்கப்பட்ட நிலையில், 2 கிலோ 200 கிராம் கொண்ட கேரளா கஞ்சாவை அதிலிருந்து மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள், பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கஞ்சா வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய இருவர் கைது
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment