அண்மைய செய்திகள்

recent
-

துப்பாக்கி ரவைகளுடன் மூவர் கைது!

நுவரெலியா – இராகலை, புரூக்சைட் பகுதியில் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 10 ரவைகள் மற்றும் கற்களை உடைக்க பயன்படுத்தும் 12 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக, மூன்று சந்தேக நபர்களை இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.

 இராகலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு காரொன்றில் நேற்று (10) இரவு, சந்தேகநபர்கள் சென்றுக் கொண்டிருந்த வேளையில், இராணுவத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்படி காரை புரூக்சைட் பகுதியில் வைத்து நிறுத்தி, அவர்கள் சோதனை செய்துள்ளனர். இதன்போதே துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிகுண்டுகள் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி ரவைகளுடன் மூவர் கைது! Reviewed by Author on December 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.