அண்மைய செய்திகள்

recent
-

மகாகவி பாரதியின் 138 வது ஜனன தினத்தை யொட்டி மட்டக்களப்பில் பாரதியார் சிலை திறப்பு விழா

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரின் திருவுருவச்சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பாடுமீன் அரிமா லயன்ஸ் கழகத்தினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலை மட்டக்களப்பு – ஊறணியில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

 மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் தலைவர் இ.மு.றுஸ்வின் தலைமையின் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியகஸ்தர் - சுஜீவ விஜயசேர மற்றும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர். 

 இவ் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்காகு பாராதியாரின் கவிதைத்தொகுப்படங்கிய நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் அதிதிகளால் சின்னம் சூடியும் கௌரவிக்கப்பட்டனர்.


மகாகவி பாரதியின் 138 வது ஜனன தினத்தை யொட்டி மட்டக்களப்பில் பாரதியார் சிலை திறப்பு விழா Reviewed by Author on December 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.