30 குழந்தைகளைக் கடத்தி விற்றவர் மாத்தளையில் கைது
இணையத்தின் ஊடாக விளம்பர காணொளி ஒன்றை தயாரித்து குறித்த நபர்கள் இந்த மோசடியை மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் நடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை சந்தேக நபர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்து, ஒப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு குழந்தைகள் பிறந்தவுடன் குறித்த குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளில் இந்த மோசடியை ´பேபி பார்ம்´ என குறிப்பிடுவதாகவும் இதனுடன் தொடர்புடைய 12 கர்ப்பிணி பெண்களை பொலிஸார் இனங்கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுள் 5 பேரின் குழந்தைகள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று குழந்தைகளுடன் தாயார் இருப்பதாகவும் மேலும் 12 கர்ப்பிணி பெண்கள் சந்தேக நபரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அவ்வாறு சுமார் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 குழந்தைகளைக் கடத்தி விற்றவர் மாத்தளையில் கைது
Reviewed by Author
on
December 22, 2020
Rating:

No comments:
Post a Comment