அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதி மீது துப்பாக்கி சூடு

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதியொருவர் பொலிஸாரால் சுடப்பட்ட நிலையில் படுகாயமடைந்து மாத்தறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கந்தார பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவிக்கையில் தனது துப்பாக்கியிலிருந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ரவைகளை வெளியே எடுத்தவேளை கைதி மீது ரவையொன்று பாய்ந்ததாகவும் இது ஒரு தற்செயலான விபத்து எனவும் அவர் தெரிவித்தார்.

 30 வயதான கைதி காயமடைந்த நிலையில் வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் ஆபத்தான நிலையில் இல்லை. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்றவேளை தடுப்புக்காவலில் இருந்த ஏனைய கைதிகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதி மீது துப்பாக்கி சூடு Reviewed by Author on December 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.