அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றுக்குள்ளான 5 கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை – கல்லேல்ல COVID – 19 சிகிச்சை நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இன்று (31) அதிகாலை இவர்கள் ஐவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஐவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 22, 23, 26, 32 மற்றும் 52 வயதானவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 5 கைதிகள் தப்பியோட்டம் Reviewed by Author on December 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.