அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புரவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

மன்னாரில் புரவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் இன்று சனிக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் இன்று சனிக்கிழமை பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 500 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 பெரியமடு, சன்னார் மற்றும் பேசாலை, மன்னார் பகுதிகளை சேர்ந்த புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் தொண்டு நிறுவனத்தின் நிதி அணுசரணையில் உலர் உணவு பொருட்களை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வழங்கி வைத்தார். அதே நேரத்தில் பேசாலை பகுதியில் நிவாரண பொருட்களை 280 குடும்பங்களுக்கு வழங்கி வைத்த காதர் மஸ்தான் பேசாலை கடற்கரை பகுதிக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பார்வையிட்டார்.
            






மன்னாரில் புரவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு Reviewed by Author on December 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.