அண்மைய செய்திகள்

recent
-

பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தை முடக்கபடுமா இல்லையா என முடிவெடுக்கப்படும்!

பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தையை முடக்குவதா? இல்லையா? என தீர்மானம் எடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

 குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், 38 வயதுடைய உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும், மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கரவண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடுவோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.இதனால் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்தே மருதனார்மடம் பொதுச்சந்தை முடக்கபடுமா இல்லையா என முடிவெடுக்கப்படும்! Reviewed by Author on December 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.