அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்பட்டது- இராணுவம் குவிப்பு

கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியா- பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பட்டாணிசூர் பகுதி கடந்த ஒருவாரமாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. 

 இதேவேளை பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா, பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபாரநிலையங்களை நடாத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். 

 அதனை கருத்தில் கொண்டு வவுனியா- பசார் வீதியின் ஒருபகுதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் நேற்று முன்தினம் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியது அவர்களில் 54 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் பசார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதி என்பன சற்று முன்னர் முற்றாக முடக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதியாகியவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்பட்டது- இராணுவம் குவிப்பு Reviewed by Author on January 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.