அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு !

நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 869 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 

 அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்று உறுதியானவர்களில் 6 ஆயிரத்து 320 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 688பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 290 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ! Reviewed by Author on January 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.