மன்னார் மாவட்டத்தில் இம்முறை 21 ஆயிரத்து 546 ஏக்கர் ஹெக்டெயர் நெற் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
-மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் கிழமை(10) மாலை நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம், விவசாயத் திணைக்களம் உற்பட தொடர்பு பட்ட திணைக்களங்களுடன் நெல் கொள்வனவு தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.
-அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 546 ஏக்கர் ஹெக்டெயர் நெற் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் 85 ஆயிரம் மெற்றிக்தொன் உற்பத்தி இதன் மூலம் கிடைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
-நெல் சந்தைப்படுத்தும் சபையினர்,உர மானியம் பெற்றவர்களிடம் இருந்து குறிப்பட்ட அளவு நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் பணித்துள்ளது.
அதன் அடிப்படையில் 1 தொடக்கம் 1.5 ஹெக்டெயர் பயிர்ச் செய்கைக்காண உர மானியத்தை பெற்றுக் கொண்டவர்கள் 1000 கிலோ நெல்லையும்,1.5 தொடக்கம் 2 ஹெக்டெயர் பயர்ச் செய்கைக்கு உர மானியத்தை பெற்றுக் கொண்டவர்கள் 1500 கிலோ நெல்லையும் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தும் சபை சிகப்பு,வெள்ளை நாடு நெல் 14 வீத ஈரப்பதனுடன் ஒரு கிலோ 50 ரூபாவிற்கும், சிகப்பு,வெள்ளை கீரி சம்பா நெல் 14 வீத ஈரப்பதனுடன் ஒரு கிலோ 52 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 15 ஆம் திகதியில் இருந்து நெல் கொள்வனவை ஆரம்பிப்பதாகவும், மருச்சிக்கட்டி மற்றும் நானாட்டான் பகுதிகளில் உள்ள நெல் களஞ்சிய சாலைகளில் இருந்து திங்கள்,செவ்வாய்,புதன் ஆகிய மூன்று தினங்களிலும், முருங்கன் மற்றும் மாந்தை ; உள்ள நெல் களஞ்சிய சாலைகளில் இருந்து வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களிலும் குறித்த நெல் கொள்வனவுகள் இடம் பெறும் என நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இம்முறை 21 ஆயிரத்து 546 ஏக்கர் ஹெக்டெயர் நெற் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
February 10, 2021
Rating:

No comments:
Post a Comment