அண்மைய செய்திகள்

recent
-

கணவன் மனைவிக்கிடையில் சண்டை! பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த கொடூர தந்தை

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மிச்நகர் கிராமத்தில் தனது மனைவியின் முதல் கணவரது 6 வயதான பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அப்பெண்ணின் 25 வயதான இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தையடுத்து தேக்கரண்டியொன்றை நெருப்பில் சூடேற்றி 06 வயது பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்துள்ளார். முகத்தில் சூட்டுக்காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, பெப்ரவரி 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரால் மீட்கப்பட்ட பெண் குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையில் சண்டை! பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த கொடூர தந்தை Reviewed by Author on February 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.