இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு – மொத்தம் 375ஆக உயர்வு
பின்னர் அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவர் தேசிய தொற்று நோயியல் நிருவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலை, குருதி விசமானமை மற்றும் சிறுநீரகம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பகுதியை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் திவுலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பட்டுள்ளது.
இதேவேளை, வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் இரனைவில சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு – மொத்தம் 375ஆக உயர்வு
Reviewed by Author
on
February 11, 2021
Rating:

No comments:
Post a Comment