அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் நேற்றையதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்கு படிக்கச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த சிறுவனின் புத்தகபை குறித்த சிறுவனின் சக மாணவனின் வீட்டிற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுவன் அவ்வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் 07 வயதுடைய ப.அபிசாந் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு Reviewed by Author on February 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.