கொவிட் தடுப்பூசி - இலஞ்சம் பெற்ற நபர் கைது
மருதானை கொவிட் தடுப்பு எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்படும் இடத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்காக 1000 ரூபாய் இலஞ்சம் பெறும் போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசிக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொவிட் தடுப்பூசி - இலஞ்சம் பெற்ற நபர் கைது
Reviewed by Author
on
March 06, 2021
Rating:

No comments:
Post a Comment