அண்மைய செய்திகள்

recent
-

மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழுவொன்று, சிறீதரனின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த குழுவின் வீடியோ காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழுவொன்று, சிறீதரனின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. Reviewed by Author on March 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.