அம்பிகைக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்கொடுக்க வேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை!
இந்நிலையில் சென்னையில் தங்கியிருக்கும் ஈழத் தமிழரான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களையும் சந்தித்து அம்பிகையின் போராட்டம் குறித்த தகவல்களை வழங்கி ஆதரவினை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இன்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்தை இன அழிப்பு என்று விழித்து குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது.
தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பிப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும். சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும்.என்று பதிவிட்டுள்ளார்.
அம்பிகைக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்கொடுக்க வேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை!
Reviewed by Author
on
March 15, 2021
Rating:

No comments:
Post a Comment