அண்மைய செய்திகள்

recent
-

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதிஸ்வர அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு

2021 ஆண்டுக்கான சிவராத்திரி தினம் வருகின்ற வியாழக்கிழமை (11) திருக்கேதிஸ்வர ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் இடம் பெறவுள்ள நிலையில் நீதி மன்ற கட்டளையின் படி மன்னார் யாழ் பிரதான வீதியில் இன்றைய தினம் தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது திருக்கேதிஸ்வர ஆலய நிர்வாக சபையினர் மற்றும் திருத்தொண்டர்கள் இணைந்து அலங்கார வளைவை அமைத்ததுடன் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நுழைவு பகுதியில் சிரம தான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்

 இம் முறை கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் பங்களிப்புடன் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திருகேதிஸ்வர சிவராத்திரி நிகழ்வுகள் மற்றும் பூஜைவழிபாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
                





சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதிஸ்வர அலங்கார வளைவு தற்காலிகமாக மீள் அமைப்பு Reviewed by Author on March 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.