அண்மைய செய்திகள்

recent
-

60 வயதிற்கு மேற்பட்வர்களுக்கு வழங்க ஒரு தொகுதி தடுப்பூசிகள் இலங்கைக்கு வருகின்றன…!

உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கோவக்ஸ் திட்டத்தின் கீழ் 1.44 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ள நிலையில் அதில் முதல் தொகுதியான 264,000 டோஸ் தடுப்பூசிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலங்கைக்கு வருகின்றன. 

 இந்நிலையில் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 1.44 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மே மாத இறுதிக்குள் முழுவதுமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கை சனத்தொகையில் சுமார் 25 விகிதமானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

 
60 வயதிற்கு மேற்பட்வர்களுக்கு வழங்க ஒரு தொகுதி தடுப்பூசிகள் இலங்கைக்கு வருகின்றன…! Reviewed by Author on March 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.