அண்மைய செய்திகள்

recent
-

தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழப்பு- கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த (47 வயது) பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஓமானிலிருந்து நாடு திரும்பிய குறித்த பெண், இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 

 இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த பெண், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கவில்லையென மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாணந்துறையினைச் சேர்ந்த எம்.இசற்.எம்.எச்.பாத்துமா சியானா (47 வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழப்பு- கிளிநொச்சியில் பரபரப்பு Reviewed by Author on April 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.