இராணுவத்தினை மோதி தள்ளிய மரக் கடத்தல்காரர் – இருவர் காயம்!
ஏ-9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.
இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதுடன் கடமையில் இருந்து இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.
இதனால் நீண்டதூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் வீதியில் வீசப்பட்டநிலையில் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களிற்குள்ளாகியுள்ளார்.
காயமைடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இராணுவத்தினை மோதி தள்ளிய மரக் கடத்தல்காரர் – இருவர் காயம்!
Reviewed by Author
on
April 18, 2021
Rating:

No comments:
Post a Comment