அண்மைய செய்திகள்

recent
-

தனிச் சிங்கள விண்ணப்பப்படிவத்தால் பாதிக்கப்படும் தமிழ் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலக வளாகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக சென்றவேளை தனிச் சிங்களத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளமையால் அதை நிரப்ப முடியாத நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளனர். தனிச்சிங்களத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை கையில் வைத்துக்கொண்டு சிரமப்படுகின்றார்கள். அப்போது விடுமுறையில் செல்வதற்காக நின்ற இராணுவ வீரர்களிடம் உதவி கேட்ட நிலையில் அவர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்துள்ளார்கள்.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட தூரங்களில் இருந்து அரச சேவையினை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தரும் மக்கள் மொழி பிரச்சினையினால் பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அரச சேவையினை மக்கள் இலகுவாக பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



தனிச் சிங்கள விண்ணப்பப்படிவத்தால் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் Reviewed by Author on April 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.