அண்மைய செய்திகள்

recent
-

மீள் ஏற்றுமதிக்கு தயாராகவுள்ள தேங்காய் எண்ணை கொள்கலன்கள்

புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் என்ற இரசாயன பதார்த்தம் கலந்துள்ளதாக உறுதியான இறக்குமதி செய்யப்பட்ட 6 தேங்காய் எண்ணை கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளினால் இன்று (06) கொழும்பு துறைமுகத்திற்கு மீள் ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 6 கொள்கலன்களே இவ்வாறு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 அத்துடன் அலி பிரதர்ஸ் நிறுவனத்தால் 4 கொள்கலன்களில் 1513.7 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை எதிரிசிங்க எடிபல் ஒயில் நிறுவனத்தால் மேலும் 3 கொள்கலன்களில் 230 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனங்களின் கொள்கலன்களும் எதிர்காலத்தில் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள் ஏற்றுமதிக்கு தயாராகவுள்ள தேங்காய் எண்ணை கொள்கலன்கள் Reviewed by Author on April 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.