பொதுமக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை !!
இன்று முதல், மே 31 வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படும் நேரத்தில் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்று முதல் அடையாள அட்டை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தாலும், வேலைக்குச் செல்வோருக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
பொருட்கொள்வனவு அல்லது மளிகை பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் தேசிய அடையாள அட்டை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை !!
Reviewed by Author
on
May 17, 2021
Rating:

No comments:
Post a Comment