அண்மைய செய்திகள்

recent
-

பொத்துவில்லில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- இருவர் கைது

பொத்துவில்- செல்வவெளி வயல்பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பொத்துவில் 15 களப்புகட்டு விச்சுநகரைச் சோந்த 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய கயாத்து லெப்பை முகமது என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை குறித்த நபர், உடும்பங்குளம்- வெல்வவெளி வயல்பகுதிக்கு சென்ற நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், களப்புகட்டு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொத்துவில்லில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- இருவர் கைது Reviewed by Author on May 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.