அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் இன்றயை தினம் திங்கட்கிழமை (31) மன்னார் நகர் பகுதியில் மக்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை தொடக்கம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு என நகர் பகுதிகளை நோக்கி வருகை தந்துள்ளனர். அதே நேரம் இன்றைய தினம் வங்கி , மற்றும் நிதி நிருவன நடவடிக்கைகளும் இடம் பெறுகின்ற நிலையில் மக்களின் நடமாட்டம் தொடர்சியாக அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது. 

 பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. அதே நேரம் இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் 'சதொச' மற்றும் 'காகில்ஸ் புட்சிட்டி' போன்ற விற்பனை நிலையங்களில் உணவு பொருட்களின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்ததுடன் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் குறித்தும் குறித்த நிறுவன அதிகாரிகளை தொலைபேசி மூலம் அழைத்து பொருட்களை வீடுகளில் இருந்தே பாதுகாப்பான முறையில் பெற்று கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
                





மன்னாரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம் Reviewed by Author on May 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.