அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

முழங்காவில் பகுதியில் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற பொதுமக்களின் முறைப்பாடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கிடைக்க பெற்றதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர மற்றும் முழங்காவில் பொலிஸ் பொறுப்பதிகாரி ருக்மால் ரத்னாயக ஆகியோரின் கவனத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளர் கை.றுஷாங்கன் கொண்டுசென்றார். 

 பயணத்தடை காலத்தில் விவசாய நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்றலாம் என்ற மேன்மைதங்கிய ஜனாதிபதியின் உத்தரவை இதன்போது அவர் நினைவூட்டினார். இதனையடுத்து ஆடு அல்லது மாடு மேய்ப்போர் தனியாக மந்தைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல அனுமதிப்பதாக பொலிஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்தத் தகவலை முடிந்தவரை அனைவருக்கும் அறியத்தந்து உதவுங்கள்




கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது Reviewed by Author on May 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.