அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு.

-நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மாவட்ட ரீதியில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பொது மக்கள், வர்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள மன்னர் பொலிஸாரால் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

 குறிப்பாக முகக் கவசம் அணியாமல் நடமாடுதல்,சமூக இடை வெளியை பின்பற்றாது செயற்படும் பொது மக்கள் மீதும் கிருமி தொற்று நீக்கிகள் சுகாதார நடை முறைகளை பின்பற்றாத வர்தக நிலையங்கள் மீதும் மேற்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. -இன்று திங்கட்கிழமை (3) காலை தொடக்கம் மன்னார் பஸார் பகுதியில் விசேட விதமாக பொலிஸார் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார நடை முறைகளை பின்பற்றாமல் பொது இடங்களில் நடமாடிய நபர்கள் மீதும் வர்தக நிலைய உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

 குறித்த கண்காணிப்பு நடவடிக்கை மன்னார் பஸார் பகுதி,பேரூந்து நிலையம் உட்பட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.




மன்னாரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு. Reviewed by Author on May 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.