அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்களில் கொரோனா சிகிச்சை நிலையம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. இதன்படி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச கஞ்சியக் கட்டடம் ஆகியவை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, நாவற்குழி அரச களஞ்சியம் 300 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை நிலையமாக அமைக்கப்படவுள்ளது. அத்துடன், வட்டுக்கோட்டை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வயாவிளான் கட்டடம் போன்றவற்றில் இடவசதிக்கு அமைய படுக்கைகளிள் எண்ணிக்கை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்களில் கொரோனா சிகிச்சை நிலையம்! Reviewed by Author on May 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.