அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு அருகில் கப்பல் ஒன்றில் தீ விபத்து

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள பொருட்கள் கப்பல் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்பட்டுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேல் திசையில் 9.5 மைல்கள் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் நேற்று (20) தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான டக் படகு ஒன்று தீயணைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 சிங்கப்பூர் நாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ´எக்ஸ்பர்ஸ் பேர்ல்´ எனும் பொருட் கப்பல் இந்தியாவின் ஹசீரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25 தொன் நைட்ரிக் அசிட், வேறு இரசாயன பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உள்ளடங்கிய 1,486 கொள்கலன்களுடன் 25 ஊழியர்கள் குறித்த கப்பலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



இலங்கைக்கு அருகில் கப்பல் ஒன்றில் தீ விபத்து Reviewed by Author on May 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.