மன்னாரில் அரசாங்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட இளைஞர் குழு தமது பணியை ஆரம்பித்தனர்.
இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பு உடைகளை வழங்கி அவர்கள் மூலம் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் செயல்பாட்டை மேற்கொள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தலைமையில் குறித்த பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பேரூந்து தரிப்பிட பகுதியில் தமது பணியை முன்னெடுத்தனர்.
மக்கள் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றார்களா?,வர்த்தக நிலையங்களில்,பேரூந்துகள் போன்றவற்றில் மக்கள் உரிய சமூக இடை வெளியை பின் பற்றி முகக்கவசம் அணிந்தள்ளார்களா? என்பதை ஆராய்வதோடு,மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் குறித்த இளைஞர் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அரசாங்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட இளைஞர் குழு தமது பணியை ஆரம்பித்தனர்.
Reviewed by Author
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment