அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அரசாங்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட இளைஞர் குழு தமது பணியை ஆரம்பித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை கடை பிடிக்கின்றார்களா? என்பதனை ஆராய்ந்து பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அமைக்கப்டப்ட இளைஞர்களைக் கொண்ட குழு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை தங்களுடைய பணியை ஆரம்பித்துள்ளனர். -மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் குறித்த குழு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம்(25) தமது பணியை முன்னெடுத்தனர்.

 இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பு உடைகளை வழங்கி அவர்கள் மூலம் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் செயல்பாட்டை மேற்கொள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தலைமையில் குறித்த பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டது. -அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பேரூந்து தரிப்பிட பகுதியில் தமது பணியை முன்னெடுத்தனர்.

மக்கள் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றார்களா?,வர்த்தக நிலையங்களில்,பேரூந்துகள் போன்றவற்றில் மக்கள் உரிய சமூக இடை வெளியை பின் பற்றி முகக்கவசம் அணிந்தள்ளார்களா? என்பதை ஆராய்வதோடு,மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் குறித்த இளைஞர் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
                 





மன்னாரில் அரசாங்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட இளைஞர் குழு தமது பணியை ஆரம்பித்தனர். Reviewed by Author on June 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.