அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் இராணுவ ட்ரக் வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு - செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ ட்ரக் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இராணுவ வீரர்கள் இரண்டுபேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று 25.06.2021 மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாகரை முகாம் இராணுவத்தினர் இலுப்படிச்சேனை பிரதேசத்திற்குச் சென்று திரும்பும் வழியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வேகமாக வந்த ட்ரக்வண்டி பாலத்தின் ஒரு பகுதியினை உடைத்துக்கொண்டு சேற்றில் விழுந்துள்ளது. இதனால் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. 

 பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெரும் பிரயத்தனத்துடன் இராணுவ வீரர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சம்பவ இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடிநின்றனர். இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் இராணுவ ட்ரக் வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம் Reviewed by Author on June 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.